வைகாசி விசாக பண்டிகையை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள்

by Editor / 18-05-2024 07:53:04pm
வைகாசி விசாக பண்டிகையை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள்

வைகாசி விசாக பண்டிகையை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே வருகிற 22.05.2024 அன்று 2 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.1.திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (ரயில் எண் 06857) திருநெல்வேலியிலிருந்து காலை 06.40 மணிக்கு புறப்பட்டு 08.15 மணிக்கு  திருச்செந்தூருக்கு வந்தடையும்.மறுமார்க்கம் திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (ரயில் எண் 06858) திருச்செந்தூரில் இருந்து காலை 09.15 மணிக்குப் புறப்பட்டு 10.50 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும்.

 2. திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு  திருச்செந்தூருக்கு வந்தடையும்.மறுமார்க்கம் திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 01.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும்.இந்த சிறப்பு ரயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாத்தான்குளம் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், காஞ்சனவிளை,  குரும்பூர், ஆறுமுகநேரி  காயல்பட்டினம் ஹாலத் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும்.இந்த பெட்டியில் ஐந்து பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : வைகாசி விசாக பண்டிகையை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள்

Share via