..உலகம்முழுதும் காதலர் தினம்

by Admin / 14-02-2023 08:50:11am
..உலகம்முழுதும் காதலர் தினம்

தமிழ் இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் காமன் பண்டிகையை அன்று இளம் வயதினர் எல்லோரும் கொண்டாடியதாகவும்
காமனாகிய  மன்மதன் தம் கையிலுள்ள கரும்பு வில்லால் கட்டிளம் காளைகளை மலர் அம்பால் வீழ்த்துவான் என்று
இலக்கிய வழி நாம் அறிகிறோம்

.புராணங்களில் இந்திரனை மன்மத கடவுளாகவே சித்தரிக்கின்றன.சிலப்பதிகாரத்தில்மாதவியும் கோவலனும்காமன் பண்டிகையின் பொழுதே பிரிந்தனர் என்கிற செய்தி தெரிகிறது. காதலைசொல்லாத தமிழ்இலக்கியமே இல்லை..புறம் சார்ந்த இலக்கியத்தில் கூட அஙகங்கே காதல் குறித்த செய்திகள் உண்டு.அகம் சார்ந்த இலக்கியம் தமிழ் இலக்கியத்தில் மட்டும்தான் உள்ளது .இறைவனைப் போற்றி பாராட்டும் பக்தி இலக்கியங்களும் காதல்நயம் சொட்ட..சொட்டவே பேசுகிறது

. சிற்றிலக்கியங்களைச்சொல்லவேண்டாம்.அவைமுழுக்க..முழுக்க..மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம் என பெண்கள் உலாவரும்மன்னனின் அழகில் மயங்கிகாதல் வயப்படுவதை காமம் ரசம் வழிய பேசும்..கம்ப ராமாயணம்,திருக்குறல்,ஆண்டாள் பெருமாளை வர்ணிக்காதசொற்கள் உண்டா.. ? காதல் இலக்கியத்தாலே இளமையோடு இருக்கும் மொழி தமிழ்.  அப்படிப்பட்ட காதல் ...இன்று
காதலர் தினமாக இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது,உலகம் முழுதும்....உலகம் காதலினால் உயிர்ப்பிப்பதால்தான்
பாரதி ஆதலினால்,காதல் செய்வீர்  என்று சொன்னான்...உலகம்முழுதும் காதலர் தினம். ஒருவாரமாகக்கொண்டாடப்படுகிறது.
 

..உலகம்முழுதும் காதலர் தினம்
 

Tags :

Share via