பைக் சாகசம் செய்த 2 இளைஞர்கள் பலி

by Staff / 24-05-2024 01:06:01pm
பைக் சாகசம் செய்த 2 இளைஞர்கள் பலி

தூத்துக்குடி குரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜீவானந்தம், பிரதீப்குமார். இருவரும் நேற்று (மே 23) இரவு தங்களது நண்பர் பூபதிராஜாவை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஜீவனந்தமும் பிரதீப்குமாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பூபதிராஜா பலத்த காயமடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via