"முதல்வருக்கு சூனியம் வைத்துள்ளனர்"

by Staff / 31-05-2024 03:54:53pm

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் கேரளாவில் பில்லி சூனிய பூஜை நடத்தி இருப்பதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "முதல்வர் சித்தராமையா, மற்றும் எதிராகவும் 5 பன்றிகள், 21 வெள்ளாடுகள், 21 செம்மறி ஆடுகள், 5 எருமை மாடுகளைப் பலியிட்டு சத்ரு பைரவி யாகம் நடத்தி உள்ளனர். இந்த யாகம் கேரளாவில் நடத்தப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via