முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி

by Staff / 04-06-2024 02:34:52pm
முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆந்திர சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 134 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலையில் உள்ளது. ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 14 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையை விட அதிக தொகுதிகளை தெலுங்கு தேசம் கைப்பற்ற உள்ளது. இதனையடுத்து, இன்று (ஜுன் 4) மாலை 4 மணிக்கு ஆந்திர முதலமைச்சர் பதவியை ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வருகிற 9ஆம் தேதி ஆந்திராவில் 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

 

Tags :

Share via