யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு 10 பேர் பலி.

by Editor / 10-06-2024 12:36:36am
 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு  10 பேர் பலி.

ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜூன் 9) ஞாயிற்றுக்கிழமை மாலை பயங்கர விபத்து நடந்தது. ஜம்முவின் ரியாசி பகுதியில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நிலை தடுமாறி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பயணிகள் காயம் அடைந்தனர். தற்போது சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு .

Share via