7ம் வகுப்பு மாணவர் தற்கொலைசிக்கிய கடிதம்

by Staff / 15-06-2024 05:37:16pm
7ம் வகுப்பு மாணவர் தற்கொலைசிக்கிய கடிதம்

விழுப்புரம் மாவட்டம் வடுகுப்பத்தை சேர்ந்தவர் பூரணி (35). இவரது மகன் விக்னேஷ். இவர்கள் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் உறவினர் உதவியுடன் புதுச்சேரி, திருபுவனைக்கு குடிபெயர்ந்தனர். நேற்று முன்தினம் (ஜூன் 13) பூரணி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது விக்னேஷ் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். தகவலறிந்த போலீசார், விக்னேஷ் உடலை கைப்பற்றிய நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை தற்போது கைப்பற்றியுள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

 

Tags :

Share via