கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் காலமான செய்தி அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது விஜய் கண்டனம்!

by Editor / 20-06-2024 10:12:14am
கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் காலமான செய்தி அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது விஜய் கண்டனம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்திய 35க்கும் மேற்பட்டோர் காலமான செய்தியறிந்து வேதனை அடைந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags : அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது விஜய் கண்டனம்!

Share via