ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

by Staff / 23-06-2024 01:15:41pm
ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த முக்காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி, அமராவதி, பார்வதி ஆகியோர் கார் மோதி உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சண்முகத்தாய் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via