100 கோடி நிலம் மோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜாமின் மனுதள்ளுபடி.

by Editor / 25-06-2024 10:36:55pm
100 கோடி நிலம் மோசடி வழக்கு  முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கர் ஜாமின் மனுதள்ளுபடி.

கரூரில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கூறி அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனிடையே இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

Tags : 100 கோடி நிலம் மோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜாமின் மனுதள்ளுபடி.

Share via