விசிக பிரமுகர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

by Staff / 28-06-2024 12:05:32pm
விசிக பிரமுகர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்து்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் சிலம்பரசன் (37). இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் அரும்பாவூர் பேரூர் கழகச் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அரும்பாவூர் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர் மீது சிலம்பரசன் நேற்று அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via