ஓடும் ரயிலில் இருந்து கழன்ற பெட்டிகள்.. பயணிகள் அச்சம்

by Staff / 28-06-2024 02:07:34pm
ஓடும் ரயிலில் இருந்து கழன்ற பெட்டிகள்.. பயணிகள் அச்சம்

கேரளா மாநிலம் எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திருச்சூரில் இருந்து ஷோர்னூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பலத்த சத்தத்துடன் எஞ்சினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக கழன்றன. இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தனியாக பிரிந்த பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via