படகு கவிழ்ந்த விபத்தில் 89 பேர் பலி

ஐரோப்பா நோக்கி 170 புலம்பெயர்ந்தவர்கள் படகு மூலம் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மொரிட்டானியா கடற்கரையில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரக் காவல்படையினர், 89 புலம்பெயர்ந்தோரின் உடல்களை மீட்டனர். இதில், ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
Tags :