கும்மிடிப்பூண்டியில் தீக்குளித்த இளைஞர் பலி

by Staff / 07-07-2024 12:39:39pm
கும்மிடிப்பூண்டியில் தீக்குளித்த இளைஞர் பலி

கும்மிடிப்பூண்டியில் கடந்த 4ஆம் தேதி ஆக்கிரமிப்பு வீட்டை போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அகற்ற முயன்றனர். அப்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் ராஜ்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு, 85% தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சையில் இருந்த ராஜ்குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
 

 

Tags :

Share via