அசாம் கனமழை.. 58 பேர் பலி
அசாமில் கடந்த மாதத்தில் இருந்து மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால், வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இதனை அசாம் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தி உறுதிப்படுத்துகின்றது. இவர்களில் நேற்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இவற்றில் தூப்ரி மாவட்டம் அதிக அளவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, கச்சார் மற்றும் தர்ராங் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
Tags :