சாலையில் நடந்து சென்றவர் குத்திக்கொலை

by Staff / 10-03-2024 03:47:48pm
சாலையில் நடந்து சென்றவர் குத்திக்கொலை

மதுரை மாவட்டம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (35). இவர் கோவை துடியலூர் அடுத்த காசி நஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலைகள் செய்து வருகிறார். இன்று அதிகாலை 6 மணி அளவில் தேநீர் அருந்துவதற்காக சென்ற அவரை வழிமறித்த மர்ம நபர் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜெய்கணேஷ் உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர். மேலும் இந்த கொலை எதற்காக நடந்தது என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via