12 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை

பீகார் மாநிலம் முசாபர்பூரில், தனது 12 வயது மகளை கழுத்தை நெரித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருண் குமார் (35) என்பவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றார். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது மகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அவரை போலீசார் கைது செய்த நிலையில் மகள் மீது கோபமாக இருந்ததால் கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :