வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Tags : வேளாங்கண்ணி பேராலய திருவிழா















.jpg)



