தென்காசி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.....வி கே சசிகலா

by Staff / 08-07-2024 05:30:18pm
தென்காசி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.....வி கே சசிகலா

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலிக காரணமாக தமிழக முழுவதும் வி கே சசிகலா தனது ஆதரவாளர்களை சந்திப்பது தொடர்பாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தென்காசியில்  தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனை தொடர்ந்து வி.கே சசிகலா அதிமுக தொண்டர்களை இணைக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தொண்டர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வி கே சசிகலா சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக தென்காசி மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்திக்கிறார்.

இதற்கு அனுமதி பெறும் வகையில் வி.கே சசிகலாவின் ஆதரவாளர்கள் இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் தென்காசியில் தொகுதி வாரியாக நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த பயணம் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு பகுதிகளிலும் கழக கொடி ஏற்றுதல், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிப்பதற்கும் வாகன அனுமதி மற்றும் ஒலிபெருக்கி அனுமதிகள் வழங்குவது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
 

 

Tags :

Share via