அரசின் மிரட்டல்களுக்கு பாமக பணியாது - அன்புமணி

by Staff / 20-07-2024 02:51:19pm
அரசின் மிரட்டல்களுக்கு பாமக பணியாது - அன்புமணி

சட்டம், ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள அவர், திமுக அரசின் மிரட்டல்களுக்கு பாமக பணியாது. பாமக நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி. பொய் வழக்குகளால் கட்டுப்படுத்த முடியாது. திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து பாமகவின் போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via