மின்கம்பத்தில் மொபட் மோதி பள்ளி மாணவி பலி

by Staff / 25-09-2023 02:19:43pm
மின்கம்பத்தில் மொபட் மோதி பள்ளி மாணவி  பலி

தூத்துக்குடி அருகே உள்ள மேலக்கூட்டுடன்காடு அல்லிகுளத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 37). கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவரது மகள் பெவினா (15) பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இவர், மற்றொரு மகளுடன் சேர்ந்து மொபட் ஓட்டிப் பழகியுள்ளார். அவர் தனது சகோதரியுடன் அல்லிகுளம்-பேரூரணி ரோட்டில் மொபட்டை ஓட்டி பழகியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மீது மொபட் மோதியது.இதில் மொபட்டிலிருந்த 2 சகோதரிகளும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பெவினா பரிதாபமாக இறந்தார். அவரது சகோதரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via