குடிநீர் தொட்டியில் பினாயில் கலந்த சிறுவர்கள் கைது

by Staff / 15-07-2023 11:45:53am
குடிநீர் தொட்டியில் பினாயில் கலந்த சிறுவர்கள் கைது

கரூர் மாவட்டம் வீரணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜூலை 12 ஆம் தேதி அன்று பள்ளியில் உள்ள 3 குடிநீர்த் தொட்டிகளிலும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜேசுராஜ் போலீசில் புகார் அளித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த 11 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் கபடி விளையாடிய 4 சிறுவர்ககளை கண்டித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் குடிநீர்த் தொட்டிகளில் பாத்திரம் கழுவும்சோப்பு, பினாயில் ஆகியவற்றைக் கலந்தாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த சிறுவர்கள் 4 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

 

Tags :

Share via