நீலகிரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு.

by Editor / 23-07-2024 09:59:14am
நீலகிரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேல் கனமழை பெய்து வந்த நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் மண் சரிவுகளும் காற்றில் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக ரெட் அலர்ட் விடப்பட்டது கடந்த ஒரு வார காலமாக பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து வந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது காலை வேளையிலேயே ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல பேருந்துக்காக காத்திருக்கும் மாணவ மாணவியர் மற்றும் நடந்தே பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் மீண்டும் நீலகிரி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

 

Tags : நீலகிரி ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு

Share via