முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுதந்தை உருவப்படத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை.
தமிழ்நாடு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் ,சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளருமான கடம்பூர் செ . ராஜீ.வின் தந்தை ஆசிரியர் செல்லையா சொந்த ஊரான கடம்பூர் சிதம்பரபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வால் காலமானார்.அவரின் இறுதிச் சடங்குகள் நேற்று முன்தினம் நடைபெற்றன அதில் முன்னாள் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இன்று காலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் ,தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கடம்பூர் கே சிதம்பரபுரத்தில் உள்ள கடம்பூர் ராஜு இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது தந்தை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை.