பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையோரம் பகுதியில் அமைந்துள்ள பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைப்பெற்று கொண்டிருந்தது..
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் மசூதிக்குள் நுழைய முயன்றுள்ளனர். அவர்கள் அவ்விடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியை கொண்டு சுட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் காவலதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பயங்கர சத்ததுடன் கூடிய வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் சுமார் 45 பேர் உடல் சிதறி பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
பெஷாவர் குண்டு வெடிப்புக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மசூதி குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்தது.
மேலும் இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ் கோரசான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags :