கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த மனைவி தீக்குளிப்பு

by Staff / 01-08-2024 04:49:01pm
கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த மனைவி தீக்குளிப்பு

மதுரை கோ. புதூர் ராமவர்மா நகரை சேர்ந்தவர் கருப்பையா மனைவி திருக்குமாரி 30. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அவரை குடிப்பழக்கத்தில் இருந்து நிறுத்தும்படி மனைவி பலமுறை எச்சரித்துள்ளார். அவர் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை. இனிமேல் குடித்தால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு விடுவேன் என்று கணவரை மிரட்ட முடிவு செய்தார். அதனால் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொள்வது போல் மிரட்டி உள்ளார்.

துரதிஷ்டவசமாக அவர் அணிந்திருந்த நைலான் சேலையில் தீ பற்றியது. இதில் உடல் தீயில் கருகி உயிருக்கு போராடினார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருக்குமாரி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா பவுனம்மாள் கே புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via