மர நாய்களை வேட்டையாடிய 7 பேர் கைது - வாக்கிடாக்கி, சொகுசு கார், 2 ஆயுதங்கள் பறிமுதல்.

by Editor / 08-08-2024 09:57:50am
 மர நாய்களை வேட்டையாடிய 7 பேர் கைது - வாக்கிடாக்கி, சொகுசு கார், 2 ஆயுதங்கள் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூதமலை பகுதியில்  வனத்துறையினர் ரோந்து சென்றனர். கோகுல் என்பவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் மரநாய்கள் வெட்டப்பட்டு சமைக்கப்பட்ட கறியுடன் இருவர் இருந்தனர். விசாரித்ததில் துப்பாக்கியால் மர நாய்களை வேட்டையாடி சமைத்தது தெரியவந்தது. 

மேலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வேட்டை சம்பவத்தில் தொடர்புடைய செல்லப்பாண்டி, கணேசன், மருதபாண்டியன், கோபாலகிருஷ்ணன், நாட்ராயன், நாகமாணிக்கம், மனோகரன், ஆகியோரை கைது செய்தனர். 

தப்பிய கருவேலம்பட்டி கண்ணப்பன், காளிமுத்து ஆகியோரை தேடி வருகின்றனர்.தொடர்ந்து வனத்துறையினர் அவர்கள் தங்கிய வீட்டில் இருந்த வாக்கிடாக்கி, சொகுசு கார்,2 செல்போன்கள், மரநாய் இறைச்சி, அரிவாள்,கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்

 

Tags : மர நாய்களை வேட்டையாடிய 7 பேர் கைது - வாக்கிடாக்கி, சொகுசு கார், 2 ஆயுதங்கள் பறிமுதல்.

Share via