வயநாடு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி...?

by Editor / 08-08-2024 09:52:46am
வயநாடு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி...?

கேரளா மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. 400-க்கும் அதிகமானோரை காவு கொண்ட இந்த நிலச்சரிவில் சிக்கிய 200-க்கும் மேற்பட்டோர் கதி என்ன என்பது தெரியாத நிலைமைதான். வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்டவைகள் இனி மனிதர்கள் வாழவே முடியாத  பிரதேசமாகிவிட்டது. இத்தகைய பேரழிவுகளை ஏற்படுத்திய  நிலச்சரிவு பாதிப்பை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்கிறார். என தகவல்கள் வெளியாகியுள்ளன.நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) அவர் டெல்லியில் இருந்து வயநாடு செல்கிறார். கண்ணுர் வழியாக ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடுகிறார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். பிரதமருடன் கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல்.

 

Tags : வயநாடு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

Share via