தமிழ்ப் புதல்வன் திட்டம் நாளை தொடக்கம்
தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நாளை கோவை அரசுக் கலைக்கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த நடப்பாண்டில் ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்துவிட்டு உயர்கல்வி பயிலும் 3.28 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது.
Tags :