ஒரே இரவில் 1,00,000 பேர் பயணம்
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 14) இரவு மட்டும் 1,00,000 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் தகவல் அளித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "பயணிகள் எந்த சிரமமுமின்றி பாதுகாப்பாக பயணம் செய்துள்ளனர். அதிகப்படியான பயணிகளின் வருகையை கிளாம்பாக்கம் சிறப்பாக கையாண்டு சாதனை புரிந்துள்ளது" என தெரிவித்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளது.
Tags :