11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை-வானிலை ஆய்வு மையம்

by Editor / 19-08-2024 09:19:54am
11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை-வானிலை ஆய்வு மையம்

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஆகஸ்ட் 19) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 24ஆம் தேதி வரை மழை நீடிக்கும்.

 

Tags : வானிலை ஆய்வு மையம்

Share via