அனுமதியின்றி முகாம் நடத்தினால் உரிமம் ரத்து - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

by Staff / 23-08-2024 01:06:10pm
அனுமதியின்றி முகாம் நடத்தினால் உரிமம் ரத்து - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இனிமேல் தமிழகத்தில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் முன் அனுமதியின்றி எந்த விதமான முகாம்களும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அனுமதியின்றி முகாம் நடத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via