குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் மாயம், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் தேடி வருகின்றனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் சுக்கான் குளத்தில் குளித்த T.மணல்மேடு பகுதியை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர்கள் மாவீரன் 9, சக்தி 9 ஆகிய இருவரும் நீரில் மூழ்கி மாயம், கிராம மக்கள்- தீயணைப்புத் துறையினர் குளத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர், பள்ளி விடுமுறை என்பதால் குளத்தில் ஏழு மாணவர்கள் குளித்த நிலையில் இரண்டு பேர் தண்ணீர் மூழ்கி மாயமான சம்பவம் காரைமேடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Tags :