508 ரயில்நிலையங்களில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

by Editor / 06-08-2023 08:17:49am
508 ரயில்நிலையங்களில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

 இந்தியா முழுவதும் இன்று 508 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தினை பாரதப்பிரதமர் நரேந்திரமோடி 10.45 மணிக்குத்தொடங்கிவைக்கிறார்.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் இவ்வளவு மாற்றங்களைப்பெறப்போகும் ரயில்நிலையங்கள்.

இந்திய ரயில்வேயானது தனது  உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பயணிகளின் அனுபவத்தையும், வசதியையும் மேம்படுத்துவதற்கும் ஒரு பெரிய மாற்றத்தை மேற்கொள்ள உள்ளது.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்ட நிலையங்கள், உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரயில் பயனீட்டாளர்களின் நலனுக்காக பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மின்மயமாக்கல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வரும் 6ஆம் தேதி அன்று பிரதமர், இந்திய இரயில்வேயில் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டுகிறார்.

இத்திட்டத்தின் முதல் பகுதியாக,  மதுரை கோட்டத்தின் பின்வரும் 15 ரயில் நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

1.பழனி
2. திருச்செந்தூர்
3. அம்பாசமுத்திரம்
4. விருதுநகர்
5. புனலூர்
6. சோழவந்தான்
7. தென்காசி
8. ஸ்ரீவில்லிபுத்தூர்
9. காரைக்குடி
10. கோவில்பட்டி
11. மணப்பாறை
12. புதுக்கோட்டை
13. ராமநாதபுரம்
14. ராஜபாளையம்
15.பரமக்குடி

இத்திட்டத்தின் நோக்கங்கள்

1. நீண்ட கால அணுகுமுறையுடன், தொடர்ச்சியான அடிப்படையில் ரயில் நிலையங்களை மேம்படுத்துதல்.
2. நிலையங்களில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக, மாஸ்டர் பிளான்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை படிப்படியாக செயல்படுத்துதல்.

3. நிலையத்தின் அணுகு பகுதி
4. சுற்று பகுதிகள்,
5. காத்திருப்பு கூடங்கள்,
6. கழிப்பறைகள்,
7. தேவையான லிஃப்ட்/எஸ்கலேட்டர்கள்,
8. தூய்மை,
9. இலவச இணைய வசதி,
10. 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' போன்ற திட்டங்களின் மூலம் உள்ளூர் தயாரிப்புகளுக்கான கியோஸ்க்குகள்,
11. பயணிகள் தகவல் அமைப்புகள்,
12. எக்சிகியூடிவ் ஓய்வறைகள்,
13. வணிக கூட்டங்களுக்கான அரங்குகள் ,
14. பூங்காக்கள்
15. நிலைய கட்டிடத்தை மறுவடிமைப்பு செய்து மேம்படுத்துதல்,
16. நகரின் இருபுறமும் நிலையத்தை ஒருங்கிணைத்தல்,
17. பன்முக ஒருங்கிணைப்பு,
18. மாற்றுத்திறனாளிகளுக்கான  வசதிகள்,
19. சுற்றுச்சூழலுக்கு ஏதுவான  அமைப்புகள்
20. ஜல்லிக்கற்கள் இல்லாத நடைமேடை தண்டவாளங்களை வழங்குதல்,
21. தேவை மற்றும் சாத்தியக்கூறுகளின்படி ‘ரூப் டாப் பிளாசாக்கள்’மற்றும் சிட்டி சென்டர்களை உருவாக்குதல்.உள்ளிட்டவைகள் இந்த திட்டத்தில் இடம்பெறுகின்றன.
 

508 ரயில்நிலையங்களில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.
 

Tags : அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

Share via