மேயரை மதிக்காத பொறியாளர் செல்லை பிடுங்கிய மேயர். 

by Editor / 25-09-2024 04:01:19pm
மேயரை மதிக்காத பொறியாளர் செல்லை பிடுங்கிய மேயர். 

தஞ்சாவூர் மாநகராட்சி மாநகராட்சியின் மேயராக ராமநாதன் செயல்பட்டு வருகிறார். இவர் திமுகவை சேர்ந்தவர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேயர் ராமநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி பெண் பொறியாளர் ஆனந்தி செல்போனில் பேசிக்கொண்டே குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். இதனால் கடுப்பான மேயர், 'இங்க வாங்கம்மா' எனக்கூறி அவரது செல்போனை பிடுங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வேலையை பாருங்க என அறிவுரை கூறினார்.

 

Tags : மேயரை மதிக்காத பொறியாளர் செல்லை பிடுங்கிய மேயர். 

Share via