சரக்கு வாகனத்தில் வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபர் கைது
சரக்கு வாகனத்தில் வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபர் கைது மதுபாட்டில் சரக்கு வாகனம் பறிமுதல்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் சுங்கசாவடி பகுதியில் கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் தலைமையிலான போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அவ் வழியாக கோவாவில் இருந்து சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர் சோதனை செய்ததில் கோவாவில் இருந்து மது பாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது இதனையடுத்து லாரி ஓட்டுநர் ராஜா புதுக்குடியைச் சேர்ந்த பலவேசம் மகன் முனியசாமி (34) மற்றும் 40 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கயத்தாறு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Tags :