பள்ளிப் பேருந்து விபத்து.. மாணவர்கள் காயம்.. பதறிய பெற்றோர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியைச் சேர்ந்த பேருந்து, இன்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்ந்தது. அப்போது, முன்னே சென்ற அதே பள்ளியைச் சேர்ந்த பேருந்தின் மீது மோதியது. இதில், 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டுநர் செல்போன் பேசியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தை அறிந்து பதறிய பெற்றோர், பள்ளியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Tags :