அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைநிறைவடைந்தது.

by Editor / 25-10-2024 08:01:10am
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைநிறைவடைந்தது.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை இன்று (அக்., 25) அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைந்தது. 3 நாட்களாக நடந்த இந்த சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்தது.

 

Tags : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

Share via