தீபாவளி பண்டிகையை முன்னிட்டு   ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

by Admin / 27-10-2024 01:02:26pm
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு   ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு   ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

எட்டயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும்.கிராமப்புறங்களில் வளரும் ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்படுவதால், திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.ரம்ஜான், தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை அதிகமாக நடக்கும். 

வரும் 31-ந்தேதி தீபாவளி பண்டிகைகொண்டாடப்பட உள்ளதையொட்டி நேற்று  இரவு முதல் எட்டயபுரம் சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்க வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர்.

பால்குடி மாறாத குட்டி ஆடு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. வளர்ந்த ஆடுகள் கிலோ ரூ.800 என்ற விலையில் ரூ.7 ஆயிரம்முதல் ரூ30 ஆயிரம் வரை விற்பனையானது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு   ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
 

Tags :

Share via