8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த 7 பேர் போக்சோவில் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளியில் நடந்த இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இச்சம்பவம் நடந்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 5 முதியவர்கள், 2 இளைஞர்கள் உள்பட 7 பேரை போக்சோவில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :