திருப்பதி லட்டு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் - 4 பேர் கைது

by Editor / 10-02-2025 09:05:15am
திருப்பதி லட்டு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில்  - 4 பேர் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், திண்டுக்கல் ஏ.ஆர். டைரி உரிமையாளர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். மேலும், திருப்பதியில் உள்ள வைஷ்ணவி பால் பண்ணை தலைமை நிர்வாகி அபூர்வா சாவ்டா, உத்தராகண்ட் மாநிலம் ரூக்கியில் உள்ள போலே பாபா பால்நிறுவனத்தின் விபின் ஜெயின், போமில் ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள், முத்திரைகள் மூலம் திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கான நெய் விநியோக டெண்டரை நிறுவனங்கள் பெற்றது தெரியவந்துள்ளது.

 

Tags : திருப்பதி லட்டு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் - 4 பேர் கைது

Share via