தீக்குளித்த மகன்: விஷம் குடித்து தந்தை பலி

by Staff / 26-02-2025 04:07:43pm
 தீக்குளித்த மகன்: விஷம் குடித்து தந்தை பலி

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலையன் (58). கூலித் தொழிலாளி. இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மகேஸ்வரி மனநிலை பாதிப்பு காரணமாக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். 

மகன் சிஜோ என்பவருடன் பாலையன் வசித்து வந்தார். சிஜோவுக்கு திருமணமாகவில்லை. சிஜோ தற்போது வெளிநாட்டில் பிளம்பாரக  வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஊருக்கு வந்து, வயிற்றில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. 

தற்போது நலமடைந்து இன்று 26-ம் தேதி வெளிநாடு செல்ல சிஜோ தயாரானார். இந்த நிலையில் 24-ம் தேதி திடீரென தந்தைக்கும்  மகனுக்கும்  வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மகன் தனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். இதனால் மன வேதனையடைந்த பாலையன் விஷம் குடித்தார். 

இருவரும் ஆபத்தான நிலையில் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலையன் இன்று 26-ம் தேதி காலை உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via