காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து இளம்பெண் உயிரிழப்பு -2 எஸ்.ஐ.க்கள்.-தலைமைக் காவலர்மாற்றம். 

by Editor / 16-04-2025 09:21:47am
காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து இளம்பெண் உயிரிழப்பு -2 எஸ்.ஐ.க்கள்.-தலைமைக் காவலர்மாற்றம். 

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரி காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து இளம்பெண்   கீர்த்திகா உயிரிழந்த விவகாரத்தில், காவல்நிலைய தலைமைக் காவலர் மணிமேகலை, 2 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனது சகோதரனை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாக கூறி இரண்டு சகோதரிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மிளாவை   காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற தஞ்சை எஸ்.பி  ராஜாராமன்  உத்தரவிட்டார். அலட்சியமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள், தலைமை காவலர் மணிமேகலை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

 

Tags : காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து இளம்பெண் உயிரிழப்பு -2 எஸ்.ஐ.க்கள்.-தலைமைக் காவலர்மாற்றம். 

Share via