சாலை விபத்தில் ஒருவர் பலி

by Editor / 25-04-2025 05:15:30pm
சாலை விபத்தில் ஒருவர் பலி

பேரூர்-சிறுவாணி மெயின் ரோட்டில் அடையாளம் தெரியாத கார் மோதியதில் சுந்தரம் (49) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். முத்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான இவர், சம்பவத்தின்று பேரூர் - வெள்ளலப்பட்டி ரோட்டில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது. மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. பலத்த காயமடைந்த சுந்தரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via