மன அழுத்தம் காரணமாக பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை

கர்நாடாக மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில், 19 வயது மாணவி தேஜஸ்வினி என்ற மாணவி படித்து வந்தார். இவர் தனது விடுதி அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அங்கிருந்த மீட்கப்பட்ட குறிப்பில், தனது முடிவுக்கு அதிகப்படியான கல்வி சார்ந்த மன அழுத்தம் மற்றும் அசைன்மெண்டுகள் தாமதமானதே காரணம் என மாணவி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :