இஸ்ரேல் - ஈரான் மோதல்.. மக்களை காக்க களமிறங்கிய இந்தியா

by Editor / 18-06-2025 01:24:09pm
இஸ்ரேல் - ஈரான் மோதல்.. மக்களை காக்க களமிறங்கிய இந்தியா

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 13ஆம் தேதி ஈரானின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய மக்களை காக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

 

Tags :

Share via