குல்பி ஐஸில் இறந்த ஈ; உணவு பாதுகாப்புத்துறை சோதனை

கோவை கரும்புக்கடை சாரமேடு ரோட்டைச் சேர்ந்த சிராஜிதீனின் (39) மகள், போத்தனூரில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் வாங்கிய குல்பி ஐஸில் இறந்த ஈ இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையில் சோதனை நடத்தினர்.
விசாரணையில், குல்பி ஐஸ் சேலத்தில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. கடையை சுத்தமாக பராமரிக்கவும், ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கவும் அதிகாரிகள் இன்று (ஜூன் 19) கடை நிர்வாகத்துக்கு உத்தரவு வழங்கினர்.
Tags :