இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணையை ஏவி ஈரான் தாக்குதல்

by Editor / 19-06-2025 04:46:28pm
இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணையை ஏவி ஈரான் தாக்குதல்

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இருநாடுகளும் தீவிரத் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் மீது சக்தி வாய்ந்த செஜ்ஜில் ஏவுகணையை கொண்டு தாக்குதல் நடத்தியதாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் X தளத்தில் தெரிவித்துள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட செஜ்ஜில் ஏவுகணை 2,000 ஆயிரம் கி.மீ, பயணித்து துல்லியமாக தாக்கக்கூடியது. இந்த ஏவுகணையின் வேகம் இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via