தீப்பற்றி எரிந்த ரயில்: பரபரப்பு
விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று அதிகாலை திருப்பதிக்கு வந்து சேர்ந்த திருமலா எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் இறங்கிய பின்பு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது யாரோ ஒருவர் பாதி எரிந்த நிலையில் இருந்த சிகரெட் துண்டை ரயிலின் S6 பெட்டியின் கழிவறையில் வீசி சென்றுள்ளார். இதனால் அந்த பெட்டி தீ பற்றி எரிந்தது.இதனை பார்த்து பதறிய பயணிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் நிலைய ஊழியர்கள் ஆகியோர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த சம்பவம் பற்றி ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்து ரயில் பெட்டியில் பாதி எரிந்த சிகரெட்டை வீசி சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags :