ஆளுநர் விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

by Staff / 13-03-2024 12:13:24pm
ஆளுநர் விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை, வேப்பேரியில் நடைபெறும் கால்நடை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்கள் வழங்க உள்ளார். ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமைச்சர் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தார் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories